மும்பை: சரத்பவாரின் பேஸ்புக் பக்கத்தில், ‘‘அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நரேந்திர தபோல்காருக்கு நிகழ்ந்தது போல விரைவில் உங்களுக்கும் நிகழும்” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். புனேவில் சரத்பவார் செய்தியார்களிடம் கூறுகையில், ‘‘ மிரட்டல் விடுப்பதன் மூலமாக ஒருவரது குரலை ஒடுக்கிவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது தவறான கருத்தாகும். மகாராஷ்டிரா காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதை பற்றி நான் கவலைப்படவில்லை” என்றார்.
சரத்பவாருக்கு கொலை மிரட்டல்
previous post