சேலம்: ஓமலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற இந்துமதி என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஓமலூர் மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது இந்துமதி உயிரிழந்துள்ளார். ஓமலூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் இந்துமதி இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.