Friday, May 17, 2024
Home » மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு போலீசார் வலை

மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு போலீசார் வலை

by Ranjith

சோழிங்கநல்லூர்: ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் கலா, (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனியார் நிறுவன ஊழியர். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கலாவை பிரிந்து சென்றார். இவருக்கு, 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே கலாவுக்கு, தனது அத்தை மகன் ஜனார்த்தனனுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2 வருடங்களாக இருவரும் கணவன், மனைவி போன்று ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஜனார்த்தனனுக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவியும் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கலாவின் மகளுக்கு ஜனார்த்தனன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த கலா அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, கலாவின் மகளுக்கு ஜனார்த்தனன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த கலா, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில், ஜனார்த்தனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

fifteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi