Tuesday, May 14, 2024
Home » மிக்ஜாம் புயலால் பாதித்த 4 மாவட்டங்களில் சிறுவணிகர்களுக்கு ரூ.10,000 வரை கடன்… இன்று முதல் முகாம்கள் தொடக்கம்!!

மிக்ஜாம் புயலால் பாதித்த 4 மாவட்டங்களில் சிறுவணிகர்களுக்கு ரூ.10,000 வரை கடன்… இன்று முதல் முகாம்கள் தொடக்கம்!!

by Porselvi

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறுவணிகர்களுக்கு “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டத்தின் முகாம்கள் இன்று முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல் மழையால் பாதித்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறு வணிக கடன் முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முகாம்கள் நடைபெறுகின்றன.

மற்ற 3 மாவட்டங்களிலும் நகர கூட்டுறவு வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முகாம் நடைபெறுகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன்தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும். கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஓராண்டுக்குள் உரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். அல்லது. மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உரிய வட்டியுடனும் கடனை திருப்பிச் செலுத்தலாம். சென்னையில் 7 இடங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் 12 இடங்களிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

கூட்டுறவுத்துறையின் இணையவழி விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து தெரு வியாபாரிகள் கடன் பெறலாம். சிறு வணிகர்கள், தெருவோர வியாபாரிகள், காய்கறி, பூ, பழ வியாபாரிகளும் கடன் பெற தகுதியானவர்கள். கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரும் கடன் பெறலாம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

12 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi