சென்னை : மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, கடந்த ஜனவரி வரை 24,25,336 குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதம் ரூ.1,455.20 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு இதுவரை நிவாரணத் தொகையை வழங்காத நிலையில் ரூ.1,487 கோடியை தமிழ்நாடு அரசே வழங்கியுள்ளது என்றும் விடுவிக்கப்பட்ட நிவாரண தொகை கோரி விண்ணப்பித்த 53,000 குடும்பங்களுக்கு ரூ.31.73 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.