புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. 2017-ல் ஆர்.கே.நகர் தேர்தலின்போதும் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. 2017 சோதனையின்போது ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்த சோதனை தொடர்பான ஆவணங்கள் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கின. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு என்று 2022-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 4 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
கூட்டணியை இறுதிசெய்து அதிமுக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது. பா.ஜ.க.வின் கதவுகள் திறந்திருப்பதாக தொடர்ந்து அக்கட்சியினர் கூறிவந்த நிலையில் அதிமுக தனி அணியாக மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவானதை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.