‘‘கரன்சி ஒழுங்கா கொடுக்காத நிர்வாகிங்கள கண்டுபிடிக்க இலைக்கட்சி தலைவர் குழு அமைச்சிருக்காராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் நடந்து முடிந்த தேர்தலை தன்னந்தனியா நின்னு சந்திச்சாரு.. கரன்சியை நம்பியே அவர் களத்தில் குதிச்சதா கட்சிக்காரங்களே பேசிக்கிட்டாங்க.. அதன்படியே ஓட்டுக்கு இருநூற்றைம்பது என கணக்கு செஞ்சி 70 சதவீத ஓட்டுகளுக்கு சப்ளை செய்யப்பட்டதாம்.. கட்சிக்காரங்க மற்றும் நடுநிலையாளர்களை கண்டுபிடிச்சு அவர்களுக்கு கொடுக்க உத்தரவிட்டாராம்.. அதன்படியே ரத்தத்தின் ரத்தங்கள் சப்ளை செஞ்சிருக்காங்க.. ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைஞ்ச இலைக்கட்சி தலைவரு, தேர்தல் முடிந்த மறுநாளே, கரன்சி கொடுத்த பட்டியலை வாங்க சொல்லிட்டாராம்.. மாங்கனி மாவட்ட செயலாளரும் உடனே வாங்கிட்டாராம்..
ஓட்டுப்பதிவான அன்று கரன்சி வாங்கியவர்கள் ஓட்டுப் போட வந்தார்களா என பூத் ஏஜென்ட்கள் டிக் செஞ்ச பட்டியலையும் வாங்கிட்டாங்களாம்.. முதல் பட்டியலில் வாக்காளர் பெயருடன், போன் நம்பரும் இருக்கு.. ஓட்டுக்கு கரன்சி வந்துச்சா, எத்தனை பேருக்கு கொடுத்தாங்கன்னு கேட்கப்போறாங்களாம்.. இதற்காக தனிக்குழு ஒன்றை சேலத்துக்காரர் அமைச்சிருக்காராம்.. தேர்தல் ரிசல்ட் வருவதற்குள்ள விசாரிச்சு, கரன்சியை ஒழுங்கா கொடுக்காத நிர்வாகிகளை கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்கப்போறதா சொல்லியிருக்காராம்.. கரன்சி கொடுப்பதே தவறு, கடும் வெயிலிலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நம்பாமல் இருப்பது நியாயம்தானான்னு ரத்தத்தின் ரத்தங்கள் கேள்வி கேட்டுட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெட்ட வெளிச்சத்துக்கு வந்த மறைமுக பனிப்போரால் இலைக்கட்சி வேட்பாளர் ஒருத்தர் புலம்பி தவிக்கிறாராமே..’’ எதுக்காம் என்றார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் இலை கட்சி சார்பில் இரண்டு எழுத்து பெயர் கொண்டவர் போட்டியிட்டார். மாஜி அமைச்சரின் ஆதரவில்தான் வேட்பாளர் களம் இறக்கப்பட்டாராம்.. ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் இடையே மறைமுக பனிப்போர் இருந்து வந்திருக்கு… இதனால் பிரசாரம் ஆரம்பம் முதல் வேட்பாளர் ஓரிடத்திலும், மாஜி அமைச்சர் மற்றொரு இடத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்காங்க.. இதில் 2 பேருக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த பணிப்போர் வாக்குப்பதிவின் போது வெட்ட வெளிச்சமாகிவிட்டதாம்.. மாஜி அமைச்சரை நம்பி தான் வேட்பாளராக களத்தில் இறங்கினேன். ஆனால்…. பிரசார ஆரம்பத்தில் இருந்தே தனியாகத்தான் ஓட்டு கேட்க செல்ல முடிந்தது.
இறுதி கட்ட பிரசார வரையிலும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையென தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் வேட்பாளர் புலம்பி வருகிறாராம்… வேட்பாளர், மாஜி அமைச்சர் இடையே மோதல் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் சொந்த கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு.. இந்த தகவலை சேலம்காரர் கவனத்துக்கு அவரது ஆதரவாளர்கள் கொண்டு சென்றாங்களாம்.. ஆனால்… இவ்விஷயத்தை சேலம்காரர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எப்படி சம்திங் பார்க்கலாம்னு யோசிக்கவே ரூமுக்கு நூறு நாள் வேலை திட்டத்துல கைவச்சி குளுகுளு ஏசி வாங்கி போட்டிருக்கிற டெபுடி பிளாக் ஆபீசர தெரியுமா?..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி ஊராட்சி ஒன்றிய ஆபிஸ்ல 100 நாள் வேலை ஸ்கீம்ல டெபுடி பிளாக் ஆபிசராக இருக்குற ஒருத்தரு, அந்த பிளாக்லயே 16 வருஷமா வேலை செஞ்சிட்டு வர்றாராம்.. அந்த பிளாக்ல 38 பஞ்சாயத்துல போலியாக பல ேபருக்கு அட்டைய கொடுத்து, வேலை செஞ்சமாதிரி கணக்கு காட்டி வருகைய பதிவு செஞ்சிருக்காங்களாம்.. இதை செய்றதுக்கு ஒரு ஏஜென்ட வெச்சிக்கிட்டு, கூலியில பாதிய வசூல் செஞ்சி டெபுடி பிளாக் ஆபிசருக்கு வாரா, வாராம் கொடுக்கணுமாம்.. பணியோட தள பொறுப்பாளருங்களும், இந்த வேலைய பொறுப்பா செய்றாங்களாம்.. இதனால வாரந்தோறும் அந்த பிளாக் டெபுடிக்கு அடைமழையாம்.. அதோட வெயில் கொளுத்துறதால அவர் சீட்டையே, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ரூமுக்கு மாத்திக்கிட்டு, ஸ்கீம்ல கை வெச்சதுல இருந்து குளுகுளு ஏசி வாங்கி போட்டுக்கிட்டாராம்..
வேற எப்படியெல்லாம் சம்திங் பார்க்கலாம்னு யோசிக்குறதுதான் அவரோட வேலையாம்.. அதோட ஆபிஸ்ல எந்த பிரச்னையும் வராம இருக்க ஆபிஸ் அசிஸ்டென்ட்ல இருந்து எல்லாருக்கும் ஒரு பர்சன்டேஜ் கொடுத்துடுறாராம்.. இதனால அந்த டெபுடி மட்டுமில்லாம, அவங்க சொந்தக்காரங்களும் ஓஹோன்னு இருக்காங்களாம்.. விஷயம் தெரிஞ்சவங்க, போலி அட்டைய பற்றி கேட்டா? அதுக்கு, அவங்க எந்த ஊர்ல வேலை செஞ்சா என்னங்க, அவங்களுக்கு அட்டை இருக்குதுல என்று விளக்கம் தர்றாராம்.. உயர் அதிகாரிகளுக்கும் கவனிப்பு நடக்குதாம்.. இதனால உரிய விசாரணையோட, நடவடிக்ைக எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மீண்டும் கோட்டை விட்டுறாதீங்கப்பானு கெஞ்சினதா சொல்றாங்களே.. என்னா விஷயம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை, சமீபத்தில் கோவையில் பாஜ நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 500 நாட்கள் மட்டுமே உள்ளன. இம்முறை நாம் களத்தில் முன்வரிசையில் நின்று பணியாற்ற வேண்டும். ஏற்கனவே, வாக்காளர் பட்டியலை நீங்கள் ஒவ்வொருவரும் சரிபார்க்க தவறிவிட்டதால், நமக்கு வரவேண்டிய ஒரு லட்சம் ஓட்டு காணாமல் போய்விட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்புடன் பணியாற்றி இந்த தவறை சரிசெய்ய வேண்டும்.’’ என்றார். இதற்கு, நிர்வாகிகள் தரப்பில் இருந்து எவ்வித ரியாக்ஷனும் இல்லை.
‘‘சமீபத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியாற்றிய நமது தொண்டர்களுக்கு பூத் கமிட்டி வாரியாக பணம் கொடுக்கப்படவில்லை, அடிமட்ட நிர்வாகிகளை முறையாக வழிநடத்தவில்லை’’ என சிலர் குற்றச்சாட்டு எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘‘மேலிடத்தில் இருந்து வந்த பணத்தைதான் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி உள்ளோம். இனி வரும் தேர்தல்களில் பூத் கமிட்டி வாரியாக எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் மீண்டும் கோட்டை விட்டுறாதீங்கப்பா… ப்ளீஸ்…’’ என கெஞ்சினார். இது, அனைவரையும் நகைப்புக்கு உள்ளாக்கியது.