Friday, May 17, 2024
Home » கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டிக்கொலை; பழிக்கு பழியா? என போலீசார் விசாரணை..!!

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டிக்கொலை; பழிக்கு பழியா? என போலீசார் விசாரணை..!!

by Kalaivani Saravanan

கடலூர்: கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி சாந்தி தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடலூர் தாழங்குடா மீனவர் கிராமத்தில் மீனவர்கள் 2 பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த மோதல் எப்போதும் கொலையில் முடியும். அதன்பிறகு பல்வேறு பிரச்சனைகள் அந்த ஊரில் ஏற்பட்டு தொடர்ந்து கிராமமானது பதற்றமான கிராமமாகவே இதுவரை கருதப்பட்டு வருகிறது.

2020ல் நடந்த மதிவாணன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக மதியழகன் உள்ளார். இந்த நிலையில், இன்று காலை சண்முகம்பிள்ளை தெருவில் நடந்து சென்ற மதியழகனை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மதிவாணன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் மதியழகன் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மதியழகன் வெட்டி கொல்லப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொலையில் ஈடுபட்டவர்கள் தப்பிச்செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய கத்தியை இந்த கும்பலானது சாலையில் தூக்கி வீசி சென்றது தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi