கடலூர்: கடலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், எஸ்பி ராஜாராம் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பல்வேறு வகையான தமிழர் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் வகையில் பொங்கலிட்டு மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது.