கடலூர்: கடலூரில் மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக குடி சோதனை கருவியில் ஊத மறுத்து மல்லு கட்டியதால் போலீசார் அதிருப்தி அடைந்தனர். கடலூர் நாகா பகுதியில் தாறுமாறாக ஓட்டிய ஆட்டோவை மடக்கி பிடிக்க போக்குவரத்து போலீசார் துரத்திச் சென்றனர். பின்னர் பாரதி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்திய ஆட்டோ ஓட்டுனரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த ஓட்டுநர் மது அருந்தியுள்ளாரா? என்பதை உறுதி செய்வதற்கான கருவியில் போலீசார் அவரை ஊதுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கருவியில் ஊதாமல் தொடர்ந்து அடம் பிடித்தார். ஊது தம்பி என கெஞ்சிய போலீசார், சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுனருடன் மல்லுக்கட்டினர். 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஆட்டோ ஓட்டுநர் ஊதினார். இதில் அவர் மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.