கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் என்பவரின் மகன் விஜயராஜுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி பாஜக பிரமுகர் பொன்.பெரியசாமி பணம் பெற்றனர். பொன்.பெரியசாமி மற்றும் அவரது கூட்டாளிகள், விஜயராஜுக்கு வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தினர்.