சென்னை: கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரபோராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஒத்துழையாமை, சட்டமறுப்பு, மது விலக்கு போராட்டங்களில் அஞ்சலையம்மாள் பங்கேற்றுள்ளார். கடலூரில் மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் கைது செய்துவிடாமல் தடுத்து காப்பாற்றினார்.