தேவையானவை:
வெள்ளரிக்காய் – ஒன்று
பால் – 250 மில்லி
சர்க்கரை – தேவையான
அளவு
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
பாதாம் மிக்ஸ் – ஒரு
டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
முந்திரி – தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, பாதம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.