திருவாரூர்: பயிர்க் காப்பீடு செய்யக்கூடிய இணைய சர்வர் கோளாறால் திருவாரூர் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். ராபி பருவத்திற்கு பயிர்க் காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாக உள்ள நிலையில் இணைய சர்வர் இயங்கவில்லை. ஒரு வாரமாக இணைய சர்வர் முடங்கியுள்ளதால் பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். பயிர்க் காப்பீடு செய்யக் கூடிய தேதியை கால நீட்டிப்பு செய்து கொடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.