சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள எஸ்டிஏடி டால்பின் நீச்சல் குளத்தில் 9வது மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. மகளிர் பிரிவில் நடந்த ஒரு போட்டியில் உத்வேகத்துடன் பாயும் வீராங்கனைகள். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியனுக்கு தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடன் இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் பாஸ்கரன், முரளிதரன், சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள்.