வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னாங்குளத்தை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகள் அஸ்வினி(18), நர்சிங் படித்து வந்தார். கடந்த 14ம் தேதி விவசாய நிலத்துக்கு சென்ற ராஜவேலு, அங்கிருந்து கொக்கு இறைச்சியை எடுத்து வந்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட அஸ்வினிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாகியும் விக்கல் நிற்காததால் உறவினர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொக்கு இறைச்சி சாப்பிட்ட நர்சிங் மாணவி சாவு
previous post