லண்டன்: இங்கிலாந்து பத்திரிகைளுக்கு எதிராக இளவரசர் ஹாரி தொடர்ந்த வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஹாரிக்கு ரூ.4.23 கோடியை பத்திரிகை வழங்க உள்ளது. இளவரசர் ஹாரியின் வழக்கறிஞர் டேவிட் செர்போர்ன் கூறுகையில்,‘‘ இளவரசர் ஹாரியும், டெய்லி பத்திரிகை வெளியீட்டாளரும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டதாகவும்,வழக்கு செலவுகளுக்காக இடைக்கால தொகையாக அவருக்கு ரூ.4.23 கோடி வழங்குவதற்கு பத்திரிகை நிர்வாகம் ஒப்பு கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.