Saturday, May 11, 2024
Home » புதுக்கோட்டை அருகே கார்-லோடு ஆட்டோ மோதி தம்பதி பரிதாப பலி

புதுக்கோட்டை அருகே கார்-லோடு ஆட்டோ மோதி தம்பதி பரிதாப பலி

by Ranjith

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கார்-லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருவண்ணாமலைக்கு சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(60). இவரது மனைவி உமா மகேஸ்வரி(46). இவர்களது மகன் பிரவீன்சுந்தர் (22). இவர்கள் மூவரும், திருவண்ணாமலை செல்வதற்காக காரில் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டனர். காரை பிரவீன்சுந்தர் ஓட்டினார். அப்போது புதுக்கோட்டை சத்தியமங்கலம் அருகே நேற்று வந்தபோது எதிரே சத்தியமங்கலத்திலிருந்து வந்த மினிவேன் மீது கார் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருவாகனங்களும் இடிபாடுகளில் சிக்கியது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் இருந்த மற்ற 2 பேரும், லோடு ஆட்டோ ஓட்டி வந்த கௌதம்கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உமாமகேஸ்வரியை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிவித்தனர். மேலும், பிரவீன் சுந்தர், கௌதம்கார்த்திக் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

2 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi