Tuesday, May 21, 2024
Home » நாட்டுப்படகு தீ வைத்து எரிப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாட்டுப்படகு தீ வைத்து எரிப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்

by Arun Kumar

தூத்துக்குடி: தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் முனீஸ்வரன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நேற்று காலை கடலுக்குச் சென்று விட்டு படகை திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இவரது படகில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நாட்டுப்படகு எரிந்து சேதமானது. இதனால் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ஏராளமான மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவரின் படகு முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதால் அவருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் மீனவரின் படகு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் தூத்துக்குடியில் இன்று சுமார் 300க்கும் மேற்பட்ட சங்குகுழி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi