பச்சரிசி – 100 கிராம்
கறுப்பு பருத்தி விதை – 50 கிராம்
தேங்காய் பெரிய மூடி – 1
முந்திரி – சிறிதளவு
சுக்கு – சிறிதளவு
ஏலக்காய் – 3
கருப்பட்டி – 1 உருண்டை
பக்குவம்:
பருத்திவிதையை தண்ணீரில் 6 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். பச்சரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு பொடித்துக் கொள்ளவும். ஊறிய பருத்தி விதையை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். கருப்பட்டியை நன்றாகப் பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.தேங்காய் முழுவதையும் துருவி, அதில் முக்கால் பங்கு எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில், பொடித்து வைத்துள்ள அரிசியைப் போட்டு சிறிதுநேரம் வேகவிடவும். கொதி வந்தவுடன் தீயைக் குறைத்து பருத்திப்பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். பருத்திப்பாலின் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்க்கவும். பின்னர் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய்ப் பாலை கடைசியாக ஊற்ற வேண்டும். அதன் பிறகு கொதிக்க விட வேண்டாம்.சங்க இலக்கியம் முதல்… பருத்திப் பாலுக்கு இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உண்டு. ‘மதுரைக் காஞ்சி’ நூலில் அரசர்களின் பிரதான பானமாக பருத்திப்பால் குறிப்பிடப்பட்டுள்ளது. போலவே சங்க இலக்கியங்களில் பருத்திக் கொட்டையை உணவுக்காக பெண்கள் சேகரித்ததும், பருத்திக்கொட்டையை கொக்கு போன்ற பறவைகள் உணவாக உட்கொள்வதையும் பல சங்கப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலையோரக் கடை முதல் எல்லா இடங்களிலும் இந்த பருத்திப் பால் கிடைக்கின்றது. பாரம் எனப்படும் பருத்திப்பூவை எடுத்த பின்னர் அதை மூட்டைகளில் கட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்வர். அதனால் ஏற்படும் நெஞ்சுவலிக்கு சிறந்த மருந்து பருத்திப்பால்.
– காரிகா