Tuesday, May 14, 2024
Home » ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

by Suresh

சென்னை: ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் எக்ஸ் தலத்தில் தெரிவித்துள்ளதாவது;

“பதவிகளை தாரை வார்த்து உயர் பொறுப்பில் உள்ளவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறதா பாஜக?

SBI வங்கி தலைவரின் பணிக்காலம் அக்டோபர் 2023-ல் நிறைவடைந்த போதும், ஆகஸ்ட் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் ஆணையத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஞானேஷ் குமார் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தவர் மற்றும் ராமர் கோவில் விவகாரத்தையும் ஒன்றிய அரசின் சார்பில் மேற்பார்வை செய்தவர்.

மேலும் அமலாக்கத்துறை தலைவரின் பதவியை நீட்டிக்க 2023-ம் ஆண்டு முழுக்க நீதிமன்றத்தில் பாஜக தவியாய் தவித்ததை நாடே அறியும்.

இப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் சட்டத்திற்கு புறம்பாக தன் வசம் வைத்துக் கொண்டு, ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை?” – என அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

three + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi