சேலம்: ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு, நடவடிக்கைக்கு ஆளாகாமலேயே இன்று ஓய்வு பெற உள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தில் பொருட்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் பதிவாளர் தங்கவேலு ஊழல் செய்தது நிரூபணம் ஆகியுள்ளது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்கவேல் மீது புகார் தெரிவிக்கபட்டது.