ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு ெகாரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று கொரோனா சோதனை செய்தார். அப்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இதே போல் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.