புதுக்கோட்டை: கொரோனா அதிகரித்துள்ள நிலையில் விமான நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எந்த மாதிரியான காய்ச்சல் என அறிய கொரோனா பரிசோதனைளய நடத்த வேண்டும். அரசு கூடுதல் கவனம் செலுத்தி பாதிப்பை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.