புதுடெல்லி: இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால்அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெயிலை சமாளிக்க தேவையான வசதிகளை கட்டாயம் செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. .
அதில், வாக்குச்சாவடி மையங்களில் போதிய நிழல், காற்றோட்ட வசதிகளை உறுதி செய்வதோடு, குடிநீர், மருந்து பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். தேர்தல் பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தருவதற்கு ஓஆர்எஸ் வைத்திருக்க வேண்டும். வாக்காளர்கள் லேசான ஈர துண்டுகளை எடுத்து வரவும், பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.