மதுரை: தேசிய சுகாதார திட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்பு கால ஊதியத்தை திரும்பப் பெறும் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலர், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த பணியாளராக செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு கால ஊதியத்தை திரும்பப் பெறும் அறிவிப்பாணைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.