சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ; தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம். இதற்கு மேல் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாடு இந்தியாவிற்கு பல துறைகளில் வழிகாட்டி வருகிறது ஏற்றுமதியில் முதன்மையாக உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 65% நிதியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பாஜக வீசும் வலையில் விஜயதரணி சிக்கமாட்டார் எனவும் கூறினார்.