பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி – தார்வாட் மத்தி தொகுதியில் தோல்வி அடைந்தார். பாஜக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றார். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டர் விலகினார்.