கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று நெய்வேலியில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பண்ருட்டி அருகே வடக்குத்து பகுதியில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் விஷ்ணு பிரசாத் காரை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து பண்ருட்டி பகுதியில் விஷ்ணு பிரசாத் வாக்கு சேகரித்தார்.