சென்னை: விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் கேண்டிடேட் போட்டியில் பங்கேற்கவுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோருக்கும் அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 4 பேருக்கும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகள், குடியரசுத் தலைவரால் டெல்லியில் வழங்கப்பட்டன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 4 பேரும் விளையாட்டுத் துறையில் இன்னும் பல உயரங்களை தொட என்னுடைய வாழ்த்துகள் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.