நீலகிரி: கர்நாடகாவில் முழுஅடைப்பு காரணமாக உதகையிலிருந்து மைசூரு, பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகள் தமிழக எல்லையான கக்கநல்லா வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உதகையில் இருந்து வழக்கமாக காய்கறி ஏற்றிச்செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேயிலை எடுத்து செல்லும் பத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொரப்பள்ளி, மசினகுடி, கக்கநல்லா சோதனை சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார்.