ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஹேமந்த் சோரன் தரப்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமலாக்கத்துறையினர் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.