கோவை: கோவை செட்டிபாளையம் அருகே பெண் பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் சென்றுவிட்டு கணவர் பாலா மாலையில் வந்து பார்த்தபோது வாயில் ரத்தம் வெளியேறி தனலட்சுமி மரணம். செட்டிபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தனலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.