கோவை: கோவை உடையார் பாளையம் பகுதியில் உள்ள அஸ்வினி அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மோகன சுந்தரம் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். மனிதர்களை இவ்வகை பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என கடும் விதிமுறைகள் இருக்கும் நிலையில், தொழிலாளியை இதில் ஈடுபடுத்தியது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.