கோவை: கோவை மருதமலை கோயில் கட்டணச்சீட்டு விற்பனை தொகையை ஒப்படைக்காத எழுத்தாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்டணச்சீட்டு விற்பனை தொகை ரூ.2.58 லட்சத்தை எழுத்தாளர் தீனதயாநிதி ஒப்படைக்கவில்லை என புகார் எழுந்தது. தீனதயாநிதியிடம் விளக்கம் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஹர்ஷினி நோட்டீஸ் அளித்துள்ளார். கட்டணச்சீட்டு தொகை செலுத்தாதது குறித்து 2 நாட்களில் விளக்கம் அளிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.