கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கில் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தோரிடம் உதவி ஆணையர் கரிகால் பாரிசங்கர் விசாரணை மேற்கொண்டுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கிரண் ஸ்ரீவத்சன், ஜகதீசன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.