கோவை: கணபதி அருகே உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கையை சேர்ந்த மரிய அர்மிதம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்கியில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு காவலர், எச்சரிக்கை ஒலிப்பான் என எதுவுமே இல்லாத நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த திருட்டு முயற்சி குறித்து திங்கள் அன்று போலீசில் புகாரளிக்கப்பட்டது.