கோவை: கோவையில் இருந்து பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி, தென்மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். காந்திபுரம் நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சக்தி வழி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து உதகை, கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.