கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் சுனில் என்பவரின் சோஃபா பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் கடையில் இருந்த ஏராளமான சோஃபா தயாரிப்பு பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சோஃபா பழுது நீக்கும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.