சென்னை: தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 55 கி.மீ. வேகத்தை சூறைக் காற்று வீசும் என்பதால் ஜன.6.7இல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள கடலோரம், லட்சத்தீவு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இன்று சூறைக்காற்று வீசும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.