தஞ்சை: 35 ஆண்டுகளுக்கும் மேல் முடியாத பட்டா மாற்றம், மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மூன்றே நாளில் முடித்து வைக்கபட்டது. தஞ்சை மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்ய 2018-ல் அதிமுக ஆட்சியின்போது மனு அளித்தார். பட்டா மாறுதல் கிடைக்காததால் விவசாயி சந்திரசேகரன் வேதனையடைந்தார். தற்போது மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் மூன்றே நாளில் விவசாயி சந்திரசேகரனுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.