சென்னை:ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தியையொட்டி 1ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது. இந்த தூய்மை பணியில் அனைவரும் நேரம் ஒதுக்கி பங்கேற்று வருகின்றனர். அதன்படி நாடு முழுவதும் ஒன்றிய அமைச்சர்கள், ஆளுநர்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசு நிறுவனங்கள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றது. அதன்படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள் துணை பொது மேலாளர் பிரேம் குமார் தலைமையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில்வே, ஒன்றிய ஜவுளித்துறை ஆகிய ஒன்றிய அரசு துறைகள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றது.