சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும், காஷ்மீர் சிறப்பு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான பாஜக முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.