Sunday, September 1, 2024
Home » திரையுலகின் உச்சத்துக்கு சென்றபோதும் அதனை தலையில் ஏறாமல் பார்த்துக் கொண்டவர் விஜயகாந்த்: சீமான் புகழஞ்சலி

திரையுலகின் உச்சத்துக்கு சென்றபோதும் அதனை தலையில் ஏறாமல் பார்த்துக் கொண்டவர் விஜயகாந்த்: சீமான் புகழஞ்சலி

by Suresh

தூத்துக்குடி: தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து திரையுலகின் உச்சத்துக்கு சென்றபோதும் அதனை தலையில் ஏறாமல் பார்த்துக் கொண்டவர் விஜயகாந்த் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு பிறகு விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயகாந்த் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள விமான நிலையம் வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது; “கேப்டன் விஜயகாந்த் பார்க்கத்தான் கம்பீரமானவர், ஆனால் அவர் ஒரு குழந்தை மாதிரி. விஜயகாந்த் என்றாலே அச்சமின்மையும், துணிவும்தான். அவர் எதற்கும் பயப்படமாட்டார். அவர் நடித்த தவசி படத்தில் நான் தான் உரையாடல் எழுதினேன். அதனால் தவசி படத்தில் மூலம் அவருடன் பணியாற்றுவதற்கும் நெருக்கமாக பழகும் வாய்ப்பும் கிடைத்து.

விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைப்போல ஒரு சிறந்த மனிதர் வருவது கடினம். திரையுலகின் உச்சத்துக்கு சென்றபோதும், அதனை தலையில் ஏறாமல் பார்த்துக் கொண்டவர். திரையுலகில் இருந்து எல்லோருடனும் சமமாக பலகும் ஒருவர் என்றால் அது விஜயகாந்த் தான்.

அதனால் அவர் என்ன சொன்னாலும் அனைவரும் கேட்பார்கள். ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் கூட விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள். எல்லாரும் அதிகளவில் அவர் மீது பாசம் வைத்திருந்தார்கள். அதற்கு காரணம் அவரும் அதே அன்போடு நேசித்ததுதான் காரணம். அப்படி ஒருவரை இழந்திருப்பது என்பது எப்படி பார்த்தாலும் மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை” என சீமான் கூறினார்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi