திருவனந்தபுரம்: சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான சித்திரை விஷு பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி விட்டது.