பெய்ஜிங் : சீனாவுக்கு வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சீன பிரதமருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். பெய்ஜிங் நகரில் சந்தித்து கொண்ட 2 நாட்டின் தலைவர்களும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கியமான கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ஆலோசனை செய்ததாகவும் போரை நிறுத்த சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தவும் கேட்டுக் கொண்டார். மேலும் பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தை சமாளிக்க இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய அவசியத்தையும் மேக்ரான் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்துக்களை உருவாக்க பயன்படும் என சீன பிரதமர் லீ கியாங் தெரிவித்தார். ஸி ஜின்பிங் 3வது முறையாக சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், சீனா வந்த மேற்கு இந்திய நாட்டின் தலைவர் மேக்ரான் ஆவார்.