பள்ளிப்பட்டு: உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டுகிறது. இதில், ஒரு பகுதியாக ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கவேண்டும். அவர்களை எந்த பணியிலும் ஈடுபடத்தக் கூடாது, குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும், தமிழ்நாடு குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.