கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பிரியா(25). இவருக்கும் கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியைச் சேர்ந்த லாரி டிரைவர் முனியப்பனுக்கும்(30) 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நவியா(4) என்ற மகளும், 10 மாத ஆண் குழந்தை கிஷானும் உள்ளனர். கணவனுடன் தகராறில் கடந்த 4ம் தேதி பிரியா, குழந்தை கிஷானை தூக்கிக் கொண்டு, பர்கூர் அடுத்த வெங்கடசமுத்திரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பெற்றோர்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 10 மாத குழந்தை கிஷானுக்கு, பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பிரியா, வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.