கடலூர்: சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. பிரம்மோற்சவம் நடத்த சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் இடையூறு செய்வதாக வந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் 400 ஆண்டாக பிரம்மோற்சவம் நடக்கவில்லை என புகார் எழுந்தது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து இணை ஆணையருக்கு அறிக்கை தர சரக ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.