சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் உள்ள கோவிந்தராஜ் பெருமாள் சன்னதிக்கு பிரமோற்சவம் நடத்துவதற்கு எதிரான வழக்கு கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு
மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நாளை சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.